Wednesday, November 11, 2009

மருத்துவர் எப்படி உங்கள் நோயை இனங்காண்கிறார் ?உண்மைத் தகவல்

ஒரு வைத்தியரிடம் நீங்கள் செல்லும் போது அவர் முதலில் உங்களோடு உரையாடுவார் , பின்பு உங்களை சோதித்துப் பார்ப்பார்,பின்பு சில மருத்துவச் சோதனைகள் செய்யும் படி கேட்பார், பின்பு உங்களுக்குரிய மருந்துகளை கொடுப்பார்.

என்ன அடிப்படியில் மருத்துவர் உங்கள் நோயை இனங்காண்கிறார் என்பதைப்பற்றி ஒரு அடிப்படை அறிவைத் தருவதற்காகவே இந்தப் பதிவு.

முதலில் உங்களோடு உரையாடும் போது வித்தியர் உங்கள் நோயின் அறிகுறிகளை மனதிலே குறித்துக் கொள்வார். அந்த அறிகுறிகளின் அடிப்படையில் உங்களுக்கு இருக்கக் கூடிய சாத்தியமான நோய்களை மனதிலே பட்டியல் இட்டுக் கொள்வார்.

இந்தப் பட்டியலில் உள்ள நோய்களில் உள்ள நோய்களின் போது உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்களைச் சோதிக்கும் போது அப்படி ஏதாவது அவர் பட்டியல் இட்ட நோய்களுக்குரிய அடையாளங்கள் உள்ளத என்று அவதானிப்பார். இப்போது உங்களுக்குத் சாத்தியமான நோய்களின் பட்டியல் சிறிதாகிவிடும். அதாவது நீங்கள் சொன்ன அறிகுறிகளை வைத்து அவர் மனதிலே உருவாகியஅந்த பட்டியல் உங்களை சோதித்த பின்பு இன்னும் சிறிதாகி இப்போது உங்களுக்கு சாத்தியமான ஒரு சில நோய்களில் உங்களுக்கு உண்மையில் என்ன நோய் இருக்கினறது என்று உறுதிப் படுத்திக் கொள்ள அவருக்கு குறிப்பிட்ட மருத்துவச் சோதனைகள் தேவைப் படலாம்.

உதாரணமாக ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனை , எக்ஸ்ரே பரிசோதனை போன்றவை.சில நோய்கள் வெறுமனே உங்கள் அறிகுறிகள் மற்றும் வைத்திய உங்களைச் சோதிக்கும் போது காணும் அடையாளங்களை வைத்தே அறியப் பட்டு விடலாம்.அந்த நேரத்தில் எந்த விதமான மருத்துவப் பரிசோதனைகளும் இல்லாமலேயே உங்களுக்கு மருந்து வழங்கப் படலாம்.

இறுதியாக உங்கள் நோய் நிச்சயமாக உறுதிப் படுத்தப் பட்ட பின்பு, உங்கள் வயது, பால் , பொருளாதார நிலைக்கு ஏற்ப உங்களுக்குரிய மருந்துகளை வழங்குவார்.

அதாவது ஒரே நோய்க்கு பல விதமான மருந்துகள் இருக்கின்றன , சில சிருவர்கலிலே பாவிக்க முடியாது, சில கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க முடியாது , சில மருந்துகள் விலை உயர்ந்தவை எல்லோருக்கும் கொடுக்க முடியாது, சில பாலூட்டம் கொடுக்கும் அன்னையருக்கு கொடுக்க முடியாது, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டே வைத்தியர் ஒருவருக்குரிய மாத்திரைகளை நிர்ணயிப்பார்.

தொப்புள் கொடி - சில நிஜப் படங்கள்

தொப்புள் கொடி என்பது ஆங்கிலத்திலே அம்பிளிகல் கோர்ட் (umbilical cord) எனப்படுகிறது. இதுதான் தாயின் குருதியில் இருந்து குழந்தைக்கு தேவையான போசாக்கு மற்றும் ஓட்சிசனை குழந்தைக்கு எடுத்துச் செல்கிறது. அதைப் போல குழந்தையின் குருதியில் உள்ள கழிவுப் பொருட்களை தாயின் குருதிக்கு எடுத்துச் செல்வதும் இதன் பொறுப்பே.

குழந்தை பிறந்தவுடன் குழந்தை வாயினால் உணவு உட்கொள்ளவும், மற்றும் தன் சுவாசத்தை ஆரம்பித்து விடுவதாலும் இதற்குரிய தேவை இல்லாமல் போகின்றது. இது வெட்டி அகற்றப் படுகிறது.

சரி, இந்த தொப்புள் கொடி எப்படி இருக்கும்.

சில படங்கள்.















Tuesday, November 10, 2009

மார்பு முளைத்த ஆண்கள்

Breasts (முலைகள் ) பெண்களைப் போலவே ஆண்களுக்கும் இருக்கின்ற ஒரு உறுப்பாகும். ஆனால் இது பூப்படைதலைத் தொடர்ந்து பெண்களில் விருத்தியடையத் தொடங்க ஆண்களில் விருத்தியடையாமல் அப்படியே இருந்துவிடுகிறது.

ஆண்களிலும் சில வேளைகளில் இவை விருத்தியடைந்து பிரச்சினைகளைக் கொடுக்கலாம். குறிப்பாக வலியினைக் கொடுக்கலாம்.

ஆண்களில் மார்பகம் விருத்தியடைதல் gynacomastia எனப்படும்.




பொதுவாக பெண்களில் காணப்படும் சில ஹார்மோன்களே இந்த மார்பக விருத்திக்கு காரணமாகும், இந்த ஹார்மோன்கள் சில ஆண்களிலும் சாதரண அளவை விட அதிகமாக சுரக்கும் போது அவர்களின் மார்பகமும் விருத்தியடையலாம். குறிப்பாக ஆண்கள் பூப்படையும் காலத்தில், வயது முதிர்ந்த காலத்தில்.

இவ்வாறன நிலைகளில் இந்த நிலைக்கு எந்த சிகிச்சையும் அவசியமில்லை.




இது தவிர சில வேறு காரணங்களுக்காகவும் இந்த மார்பக விருத்தி ஏற்படலாம்.

அவையாவன,

சிறுநீரக நோய்கள்
ஈரல் பாதிப்பு
சில வகையான புற்று நோய்கள்
தைரோய்ட் நோய்

இப்படி பல மோசமான நோய்களில் இந்த மார்பக விருத்தி ஏற்பட்டாலும் , மார்பக விருத்தியை விட வேறு அறிகுறிகளும் அந்த ஆண்களில் காணப்படும். அதாவது உங்களுக்கு மார்பகம் வளர்ந்திருக்கிறது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இந்த நோய்கள் உள்ளதோ என்று அச்சப் படத்தேவையில்லை.

மேலும் சில வகையான மாத்திரைகளை தொடர்ந்து பாதிப்பதாலும் இவை ஏற்படலாம். இவர்கள் இந்த மாத்திரைகளை பாவிப்பதை நிறுத்தும் பட்சத்தில் சாதரண நிலையை அடைந்து விடலாம்.

சந்தேகங்களைக் கேளுங்கள் !


Saturday, November 7, 2009

உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானதுதானா என்று அறிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் சுகதேகியாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இருக்க வேண்டிய உகந்த நிறை அவரின் உயரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.

அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்பவே அவர் உடல் நிறை பேணப்பட வேண்டும்

உங்கள் நிறை உங்களுக்குப் போதுமானதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இதை எவ்வாறு அறிந்து கொள்வது?

அதற்காக உடற் திணிவுச் சுட்டி(Body Mass Index ) என்ற அலகு பயன்படுத்தப் படுகின்றது . உங்கள் உடலின் உடற் திணிவுச் சுட்டியை கணிப்பதன் மூலம் உங்கள் உடல் நிறை உங்களுக்குப் போதுமா என்று அறிந்து கொள்ளலாம் .

உடற் திணிவுச் சுட்டி = உங்கள் உடலின் நிறை / உடலின் உயரத்தின் இரண்டு மடங்கு


அதாவது நீங்கள 70kg நிறையும் 160cm (1.6m) உயரமும் உடையவர் என்றால் உங்கள் உடற்தினிவுச் சுட்டி
= 70 /1.6 x 1.6
=27.3
இனி இந்த உடற்தினிவுச் சுட்டியின் மூலம் நமது நிறை நமக்குப் பொருத்தமானதுதானா என்று எப்படி அறிந்து கொள்வது?

மிகவும் இலகுவானது...

உங்கள் உடற் திணிவுச் சுட்டியை கணித்த பின் கீழே உள்ள அட்டவணையில் உள்ள படி உங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
  • உங்கள் உயரத்திற்கு ஏற்ப நிறை போதாது (Underweight ) = <18.5
  • உங்கள் உடல் நிறை பொருத்தமானது (Normal weight )= 18.5-24.9
  • உங்கள் உடல் நிறை அதிகமானது (Overweight )= 25-29.9
  • உங்கள் உடல் நிறை அளவுக்கு அதிகமாகிவிட்டது (Obesity )= 30 அல்லது அதற்கு மேலே
அதாவது உங்கள் உடற்தினிவுச் சுட்டி 18.5 யை விட குறைவானது என்றால் நீங்கள் இன்னும் கொஞ்சம் நிறையை பெறவேண்டும் என்று அர்த்தம். 18.5 யிற்கும் 24.9 யிற்கும் இடையில் இருக்குமானால் உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானது என்று அர்த்தம். 25 யிற்கும் அதிகமானால் உங்கள் உடல் நிறை அதிகமாகி விட்டது என்றும் , 30 யிற்கும் அதிகம் என்றால் நீங்கள் ஆபத்தான அளவுக்கு பருமனாகி விட்டீர்கள் என்றும் அர்த்தம். எனக்கெல்லாம் கணக்கு கொஞ்சம் வீக்கு என்று சொன்னீர்கள் என்றால் கீழே உள்ள லின்கிலே சென்று அங்குள்ள கணிப்பானில் உங்கள் உயரத்தையும் , நிறையையும் பதிவு செய்து உங்களின் உடற்தினிவுச் சுட்டியை (BMI) அறிந்து கொள்ளுங்கள். http://www.nhlbisupport.com/bmi/bmi-m.htm


Friday, November 6, 2009

Polycystic ovaian syndrom-சூலக நீர்க் கட்டிகள்



PCOS என்றால் என்ன?

ஓவரி(OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இதுதான் முட்டைகளை உருவாக்கி அந்த முட்டைகள் கருக்கட்டியே குழந்தைகள் உருவாகின்றன.
cyst எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டிகள் , poly என்பது பல என்பதைக் குறிக்கும்.

ஆக ஒரு பெண்ணின் சூலகத்திலே பல திரவக் கட்டிகளின் உருவாக்கமே poly cystic ovarian syndrom எனப்படுகிறது.

இந்த நோயானது பெண்களிலே பொதுவான ஒரு நோயாகும். நிறையப் பெண்களுக்கு இந்த நோய் இருந்தாலும் அது எல்லா பெண்களிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.


இந்த திரவக் கட்டிகளை கொண்ட சூலகங்கள் அசாதாரணமாக ஹோர்மொன்களை சுரப்பதன் மூலமே ஒரு பெண்ணுக்கு பிரச்சினைகளைக் கொடுக்கிறது.

இந்த நோயின் அறிகுறிகள் எவை?

1.அளவுக்கதிகமான பரு( முகப் பரு)

2.உடற் பருமன் அதிகரித்தல்.

3.அசாதாரண இடங்களிலே பெண்களுக்கு மயிர் வளர்தல், அதாவது முகம் , மார்பு, தொடை போன்ற இடங்களில் மயிர் வளர்தல்.

4.ஒழுங்கற்ற மாதவிடாய்

5.மலட்டுத் தன்மையை ஏற்படுத்தல்.

இவை எல்லாம் , எல்லா பாதிக்கப் பட்ட பெண்களிலேயும் இருக்கும் என்றில்லை. intha நோய் இருக்கும் போதே பல பிள்ளைகளைப் பெற்று வாழ்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட பதினைந்து பெண்களுக்கு ஒரு பெண் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவளாக இருக்கிறார்கள்.

மற்றும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சீனியைக் கட்டுப் படுத்தும் இன்சுலின் என்ற ஹோர்மொனின் திறன் குறைவதால் அவர்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப் படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.

இப்போது இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக நிறைய மருத்துவ வசதிகள் வந்து விட்டன. அதிலும் எவ்வளவு விரைவாக மருந்து ஆரம்பிக்கப் படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் பின் விளைவுகள் தீர்மானிக்கப் படுகின்றன.

ஆகவே , கன்னிப் பெண்களே உங்களுக்கு கீழே உள்ள ஏதாவது ஒரு பிரச்சினை இருந்தால் வைத்தியரை நாடி ஆலோசனை பெறுங்கள்....

1. 14 வயதாகியும் மாதவிடாய் ஆரம்பிக்காவிட்டால்.

2.மார்பு , முகம் போன்ற இடங்களிலே மயிர் வளர்ந்தால்.

3. ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய்கள்தான் ஏற்படுகிறது என்றால்.

4.அளவுக்கு அதிகமான கட்டுப் படுத்த முடியாத முகப் பரு ஏற்பட்டால்.

5.உங்கள் கழுத்து மற்றும் கமக்கட்டுப் பகுதிகளிலே கறுப்புப் படிவுகள் காணப்பட்டால்.

6.அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல் , அதிக பசி போன்ற நீரழிவு நோய்க்கான குணங்குறிகள் ஏற்பட்டால்.

7.உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்.





Thursday, November 5, 2009

வயாகரா பாவிப்பவர்களுக்காகவும் பாவிக்க நினைப்பவர்களுக்காகவும்

வயாகரா எனப்படுவது உண்மையில் சில்டநேபில் (SILDANAFIL) என்ற பதார்த்தத்தைக் கொண்ட மாத்திரையின் உற்பத்திப் பெயராகும்.
இது ஆணுறுப்பில் ரத்தத்தை தேக்கி வைப்பதன் மூலம் அதிக நேரம் விறைப்புத் தன்மையை பேண உதவுகிறது.
வயாக்ரா ஆனது 25mg, 50mg, 100mg என்ற அளவுகளிலே கிடைக்கப் படுகிறது.

வயாகரா மாத்திரை உட்கொண்டு அரை மணிநேரத்திலேயே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை அடைந்து விடும். இதனால்தான் இந்த மாத்திரை உடலுறவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் உட்கொள்ளப் பட வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.

ஆனால் இந்த மாத்திரை கொழுப்பு நிறைந்த உணவுகளோடு உட்கொள்ளப் பட்டால் இது உறிஞ்சப்பட்டு ரத்தத்தை அடைவது தாமதமாகும்.

இதய நோயாளிகள் , குறிப்பாக அவர்கள் அவர்களுடைய இதய நோய்க்கு மாத்திரைகள் பாவிப்பவர்களேயானால் வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும்.

இதய நோய்க்கு உட்கொள்ளும் சில மாத்திரைகளோடு வயாகரா உட்கொள்ளப் பட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். குறிப்பாக ISMN /ISDN எனப்படும் மாத்திர வகை இருதய நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மாத்திரையாகும் இதனோடு வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அமுக்கம் குறைந்து உயிருக்கு ஆபத்தாகலாம்.


வயகரா மாத்திரை உட்கொள்ளுபவர்கள் கீழ்வரும் பக்க விளைவுகளைக் கூட அனுபவிக்கலாம்,

  1. தலையிடி
  2. வயிற்று நோ
  3. வாந்தி
  4. வாந்தி வரும் உணர்வு
  5. வயிற்றோட்டம்
  6. பச்சை மற்றும் நீல நிறங்களை வேறுபிரிக்க முடியாமை

போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம்.




விறைக்க மறுக்கும் ஆணுறுப்புக்கள்

பாலியல் தொடர்பில் ஆண்களினிடையே இருக்கும் ஒரு பொதுவான நோய் விறைக்க மறுக்கும் ஆணுறுப்புக்கள். ஆங்கிலத்திலே இது impotence எனப்படுகிறது.

இந்த நிலை பல நோய்களினால் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்தாலும் , இளவயதிலே இந்த நிலை ஏற்படுவது, மனநிலை சம்பந்தப்பட்டது.

ஒரு இளம் ஆண் இந்த குறைபாட்டைக் கொண்டிருந்தால் அதற்குரிய காரணமாக இருக்கக் கூடியது,

  1. செக்ஸ் மீது அவருக்குரிய அச்ச மனநிலை.
  2. அளவுக்கதிகமான வேலைப் பளு மற்றும் மன அழுத்தம்
  3. தன் துணையோடு ஏற்படும் தர்க்கங்கள்
  4. மன அழுத்த நோய்
  5. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னால் செக்ஸ் கொள்ள முடியுமா என்றஅச்சமும் தன்னம்பிக்கை இல்லாமையுமே ஆகும்

இது தவிர வேறு பல காரணங்களாலும் இந்த நிலைமை ஏற்படலாம். ஆனால் இவை சற்று வயதானவர்களிலே ஏற்படுவதாகும்.அவையாவன,

  1. மது
  2. புகைத்தல்
  3. நீரழிவுநோய்
  4. உயர்குருதிஅமுக்கம்
  5. ஈரல்பாதிப்பு
  6. சிறுநீரகநோய்
  7. பாரிசவாதநோய்
  8. மனஅழுத்தநோய்

இதற்கான மருத்துவ முறைகள் தொடரும் பதிவில்...

உதை வாங்கும் அம்மாக்கள்

கர்ப்பத்தில் இருக்கும் போதே குழந்தைகள் சுட்டிகள்தான். இந்தக் குழந்தைகளின் அசைவுகள் அம்மாக்கள் மட்டும் அனுபவிக்கக் கூடிய அற்புத உணர்வு. முதன் முதலான குழந்தையின் அசைவு ஆங்கிலத்திலே (QUECKENING ) எனப்படுகிறது.

ஒரு கர்ப்பமான தாய் குழந்தையின் முதல் அசைவை கிட்டத்தட்ட 5 வது மாதத்தில் உணர்வார்கள்.

கர்பத்தின் இறுதிப் பகுதியான 8 மாதமளவில் இந்தக் குழந்தைகளின் அசைவுகள் குழந்தை உள்ளே சுகமாக உள்ளதா என்று அறிவதற்கும் உதவும் அதாவது 4 மணி நேரத்தில் குழந்தையின் அசைவு பத்தை விட குறைவாக இருக்குமானால் உங்கள் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது உகந்தது.

Wednesday, November 4, 2009

தொப்புள் கொடி - சில படங்கள்

தொப்புள் கொடி என்பது ஆங்கிலத்திலே அம்பிளிகல் கோர்ட் (umbilical cord) எனப்படுகிறது. இதுதான் தாயின் குருதியில் இருந்து குழந்தைக்கு தேவையான போசாக்கு மற்றும் ஓட்சிசனை குழந்தைக்கு எடுத்துச் செல்கிறது. அதைப் போல குழந்தையின் குருதியில் உள்ள கழிவுப் பொருட்களை தாயின் குருதிக்கு எடுத்துச் செல்வதும் இதன் பொறுப்பே.

குழந்தை பிறந்தவுடன் குழந்தை வாயினால் உணவு உட்கொள்ளவும், மற்றும் தன் சுவாசத்தை ஆரம்பித்து விடுவதாலும் இதற்குரிய தேவை இல்லாமல் போகின்றது. இது வெட்டி அகற்றப் படுகிறது.

சரி, இந்த தொப்புள் கொடி எப்படி இருக்கும்.

சில படங்கள்.
















Tuesday, November 3, 2009

ஆண்கள் எப்படி பூப்படைகிறார்கள் !

பெண்கள் பூப்படைதல் பற்றி ஒரு முந்திய இடுகையில் பார்த்தோம் இனி ஆண்களைப் பற்றி பார்ர்ப்போம்.
பெண்கள் பூப்படையும் காலம் . தொடக்கம் .. வரை. ஆனால் ஆண்கள் பூப்படையும் காலம் .. தொடக்கம் வரை.இங்கேயும் பெண்கள்தான் பெஸ்ட்.

பெண்கள் மார்பக முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல ஆண்கள் விதிகளின் () முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பார்கள். விதைகள் சற்று பெரிதாகி முதிர்ச்சியடையத் தொடங்கும் , அத்தோடு ஆணுறுப்பும் சற்று பெரிதாகும்.

தொடர்ந்து பெண்களைப் போலவே ஆண்களிலும் குறிப்பிட்ட இடங்களில் மயிர் வளரும் குறிப்பாக பிறப்புறுப்புக்கு மேலே மற்றும் அக்குள் பகுதிகளில். ஆனால் பெண்களில் இருந்து வேறுபடும் முகமாக முகம் நெஞ்சுப் பகுதிகளிலும் ஆண்களுக்கு மயிர் வளரத் தொடங்கும்.

ஆண்களுக்குரிய புஜ , மற்றும் நெஞ்சு அமைப்புக்களும் உறுதியாகும்.

பெண்கள் மாதவிடாய் ஆரம்பிப்பது போல ஆண்கள் விந்துகளை வெளியேற்றத் தொடங்குவார்கள்.

இந்தக் காலகட்டத்தில் ஆண்கள் சுய இன்பம் போன்ற செய்கைகள் மூலம் விந்துகளை வெளி ஏற்றத் தொடங்குவார்கள். சில வேளைகளில் தானாகவே விந்துகள் வெளியேறும் குறிப்பாக அதிகாலை வேளையில். இந்த புதிய மாற்றம் ஆண்களுக்கு ஆரம்பத்தில் அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தலாம்.

பூப்படையும் வயதில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு தானாக விந்து வெளியேறும் என்பது பற்றி அறிவுரைகள் வழங்கி அது சாதாரணமான ஒன்று என்று விளக்கப் படவேண்டியது சுற்றத்தாரின் கடமையாகும்.

பெண்களைப் போலவே ஆண்களும் பூப்படையும், காலத்தில் சடுதியான வளர்ச்சியைக் காண்பிப்பார்கள்.

இங்கே பெண்கள் முதலில் பூப்படையத் தொடங்க்குவதாலே சிறுவயதி ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் சற்று உயர்வாக இருக்கக் காரணமாகும்.
.......................................................................................................................................................................

சந்தேகங்களைக் கேளுங்கள் !


Monday, November 2, 2009

கர்ப்பிணி உடலுறவு கொள்ளலாமா?

கர்ப்பம் என்பது ஒரு சுகமான தூய்மையான அனுபவம். இந்தக் கர்ப்ப காலத்தில் பெண்களிலே பல உளவியல் மற்றும் உடலியல் மாற்றங்களை ஏற்படுகின்றன.
முதல் கர்ப்பம் என்றால் இந்த திடீர் மாற்றங்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்பது யதார்த்தம், அந்த சந்தேகங்கலிலே ஒன்றுதான், கர்ப்ப காலத்திலேயே உடலுறவு கொள்ளலாமா வேண்டாமா என்பது.

மருத்துவ ரீதியாக கர்ப்ப காலத்தின் போது நடைபெறுகிற உடலுறவுகளால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடாது என்றே சொல்லப்படுகிறது. குழந்தையானது கர்ப்பப் பையினுள்ளே அம்னிஒட்டிக்(amniotic fluid) எனப்படும் திரவத்தால் சூழப்பட்டே இருக்கிறது.குழந்தையை சூழ உள்ள இந்த திரவமானது குழந்தைக்கு உடலுறவின் போது ஏற்படும் அமுக்க அசைவுகளில் இருந்து போதிய பாதுகாப்பைக் கொடுக்கிறது.

கர்ப்ப காலத்தில் அநேகமான பெண்களுக்கு உடலுறவு மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்றே நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறான பெண்கள் எந்த அச்சமும் இல்லாமல் கர்ப்ப காலம் முழுவதும் உடலுறவு கொள்ளலாம்.

எப்படிப் பட்டவர்கள் கர்ப்பத்தின் போது உடலுறவைத் தவிக்க வேண்டும்?

கர்ப்ப காலத்தில் உங்களுக்கு பிறப்பு வழியில் ரத்தப் போக்கு இருந்தால் , அல்லது உடலுறவின் போது ரத்தம் போகுமானால் உடலுறவைத்தவீர்த்து வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.
இவ்வாறானவர்களுக்கு பிளசென்டா பிரீவியா(placenta previa) என்கின்ற நோய் நோய் இருக்கலாம் , அதாவது நச்சுக் கொடியானது வழமையாக இருக்கின்ற கர்ப்பப் பையின் மேல் பகுதியில் இல்லாமல் அடிப்பகுதியில் இருக்கலாம் , இது உடலுறவின் போது காயப்படுத்தப் படலாம். ஆகவே கர்ப்ப காலத்தில் இரத்தம் போகிறவர்கள் உடனடியாக உடலுறவைத்தவீர்த்து , வைத்தியரை நாடி தனக்கு அந்த நோய் இல்லை என்பதை உறுதி செய்த பின்பு உடலுறவு கொள்ளலாம்.

மேலும் கர்ப்ப காலத்தில் பால் சுரப்புத் தொடங்கி விடுவதால் , பாலால் நிரம்பிய மார்பகங்கள் சில பெண்களுக்கு வலியைக் கொடுக்கலாம். மற்றும் உடலுறவின் போது ஏற்படுகின்ற தீண்டல்களால் பால் சுரப்பு ஏற்படலாம் ஆனாலும் இது எந்த விதத்திலும் தீங்கு விளைவிப்பதில்லை.

மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடற் பருமன் மாற்றத்தால் வழமையான நிலைகளில் இருந்து சற்று வேறுபட்ட நிலைகளில் உடலுறவு கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படலாம். அதெல்லாம் தம்பதியினரின் தனிப்பட்ட விடயம் நீங்களே பார்த்துக்கொள்ளுங்ககள்.
சுகமான கர்ப்பத்தில் சுகமான உடலுறவு சுகமானதே.

மேலும் ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

டிஸ்கி-
அடுத்த பதிவு - வீட்டிலிருந்தே கர்ப்பமாகி இருப்பதை நிரூபிப்பது எப்படி?