Saturday, August 28, 2010

உடலுறவில் ஈடுபட பொருத்தமான வயது?

கேள்வி 

நல்ல பல தகவல்களை சொல்கிறீர்கள். எத்தனை வயதில் நாம் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம் என்றும் எத்தனை வயதுவரை நாம் உறவில் ஈடுபட முடியும் தயவு செய்து விளக்கினால் நிறையப் பேரின் சந்தேகம் தீரும்.

பதில்

எப்போது நாம் பூப்படைகிறோமோ அப்போதே நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக்கும் குழந்தை பெறுதலுக்கும் தயாராகத் தொடங்குகிறது.
எத்தனை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறவில்  ஈடுபடத் தயாரோ அப்போதே அவர்கள் உறவில் ஈடுபடலாம்.

ஆனால் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம்.
அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

ஆகவே திருமணம்யாகியிருந்தாலும் கூட .18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடைவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு இல்லை.
எத்தனை வயதுவரை உங்களால் முடியுமோ அத்தனை வயதுவரை நீங்கள் உறவில் ஈடுபடமுடியும்.

ஆனாலும் இள வயதுப் பெண்களைப் போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சினைகள் அவர்களுக்கு உருவாகலாம்.
ஆகவே தங்கள் குடும்பத்திற்குரிய குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடும்பக் கட்டுப் பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது   அவசியமாகும்


உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்கலாம் ?

கேள்வி 

எனது குழந்தைக்கு 1 வயதும் 3 மாதமும்  முடிந்து விட்டது . இன்னும் தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை விடவில்லை. த்தனை வயதுவரை நான் தாய்ப்பால் கொடுக்கலாம்?

மாலதி

பதில் 

நல்லது மாலதி!
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் நான்கு தொடக்கம் ஆறு மாதகாலத்திற்கு தாய்ப்பால் மட்டுமே உணவாகக் கொடுக்கப் படவேண்டும். 
அதன் பிறகு தாய்ப்பாலோடு மற்றைய உணவுகள் படிப்படியாக சேர்க்கப்பட வேண்டும். 
தாய்ப்பால் குறைந்தது ஒருவருட காலத்திற்காவது கொடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.அதற்குப்பிறகும் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு இன்னும் நன்மையளிக்கும்.
எப்போது தாய்ப்பாலை நிறுத்தவேண்டும் என்று கால எல்லை இல்லை.

எவ்வளு காலத்திற்கு உங்களால் கொடுக்க முடியுமோ அவ்வளவு காலத்திற்கு கொடுப்பது உங்களுக்கும் , உங்கள் குழந்தைக்கும் நன்மையளிக்கும்.


Thursday, August 26, 2010

குழந்தை வைத்திருப்பவர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்

வயிற்றோட்டம் உள்ள குழந்தைகளுக்கான கவனிப்பு

வயிற்றோட்டம் ஏற்பட்ட குழந்தைகளுக்கு போதியளவு நீராகாரம் கொடுப்பது அவசியமாகும்.

ஜீவனி அல்லது கஞ்சி கொடுப்பது நல்லது

கஞ்சி அல்லது ஜீவனி கொடுக்கப்பட வேண்டிய அளவு

             ஒரு வயதுக்கு குறைந்த பிள்ளைகள்            -   ஒருதடவை கழிக்கும் மலத்திற்கு அரைக் கப் என்ற அளவில் கொடுக்கப்பட     வேண்டும்
      ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு - ஒருதடவை கழிக்கும் மலத்திற்கு      ஒரு கப் வீதம் கொடுக்கப்பட வேண்டும்

எப்போது வயிற்றோட்டம் ஏற்பட்ட குழந்தையை எப்போது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் ?

மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்தல்
சாப்பாட்டைத் தவிர்த்தல்
மலத்தோடு இரத்தம், சளி வெளியேறுதல்
வயிற்றுவலி
காய்ச்சல்
சிறுநீர் கழிக்காமல் விடுதல் போன்ற நிலைமைகள் ஏற்படுமானால் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

Tuesday, August 24, 2010

குழந்தை வைத்திருப்பவர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது செய்யவேண்டியவை!
1.குழந்தைக்கு போதியளவு நீராகாரம் அருந்தக் கொடுங்கள்.
2.அதிகளவான காய்ச்சல் இருக்குமானால் அக்குள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் ஈரத் துணியினால் ஒத்தடம் பிடித்து விடுங்கள்
3.பரசிட்டமோல் மாத்திரையை / பாணி மருந்தை குழந்தையின் நிறைக்கு ஏற்ற அளவில் கொடுக்கவும்
   ( அளவுக்கதிகமாக கொடுக்கப்பட்டால் பரசிட்டமோல் மருந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் )

பரசிட்டமோல் எந்த அளவிலே கொடுக்கப்படலாம்?
பரசிட்டமோல் மருந்தானது ஒரு கிலோ உடல் நிறைக்கு 15mg பரசிட்டமோல் என்ற அளவிலே கொடுக்கப்படலாம்.என்ற அளவிலே கொடுக்கப்படலாம்.அதாவது குழந்தையின் நிறைக்கேற்ப கொடுக்கப்படவேண்டிய பரசிட்டமோல் மருந்தின் அளவும் வேறுபாடும்.பாணி மருந்து கொடுக்கப்படும் போது கீழே உள்ள அளவுகளில் கொடுக்கப்படலாம்.


உடல்நிறை                         கொடுக்கப்பட வேண்டிய பனடோல்(பரசிட்டமோல்)
                                                  பாணியின் அளவு
 9.5 – 12 kg                                   6-7.5 ml
 12 – 14 kg                                     7.5 – 9 ml
 14 – 16 kg                                     9 – 10 ml
 16 – 17.5 kg                                  10 – 11 ml
 17.5 – 19.5 kg                                11 – 12 ml

காய்ச்சல் ஏற்பட்ட குழந்தையை எப்போது வைத்தியரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்?
1.குழந்தையின் அன்றாட வாழ்க்கையினைப் பாதிக்காத சாதுவான காய்ச்சல் என்றால் இரண்டு நாட்கள் வீட்டிலேயே வைத்து   பரசிட்டமோல் மருந்துடன் கவனிக்கலாம்.
2.இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமானால் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.
3.கீழே உள்ள அறிகுறிகள் ஏதாவது இருக்கும் பட்ச்சத்தில் குழந்தையை முதல் நாளே வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்

அன்றாடச் செயற்பாடுகளில் ஈடுபடாமல் முடங்கிக் கிடக்கும் குழந்தைகள்
வழமைக்கு மாறாக அதிகரித்த அழுகை மற்றும் சாப்பாட்டைத் தவிர்க்கும் குழந்தைகள்
அதிகரித்த வாந்தி, தலையிடி, உடம்பு வலி போன்றவற்றைக் கொண்ட குழந்தைகள்
காய்ச்சல் ஏற்பட்டபின் வலிப்பு ஏற்பட்ட குழந்தைகள்
இருமலோடு மஞ்சள் நிற சளியினை கொண்டிருக்கும் குழந்தைகள்
காய்ச்சலோடு வயிற்று வலி ஏற்படும் குழந்தைகள்

Monday, August 23, 2010

குழந்தையின்மை

கேள்வி 

(என்னுடைய பெயர் மற்றும் எனது தகவல்கள் எதுவும் வெளியிடவேண்டாம்)

அன்பின் நண்பரே குழந்தையின்மை பெரும் பிரச்சினை என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை உங்களின் மருத்துவ அனுபவத்தில் நீங்கள் நிறைய கண்டிருக்க கூடும் எனது மனைவியின் சகோதரிக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது இது வரை அவர்களுக்கு குழந்தையில்லை மருத்துவ சோதனையில் பெண்ணிற்கு கருப்பையில் கட்டி உள்ளதென்று தெரிவித்தார்கள் மருத்துவர்கள் ஒரு ஆண்டிற்கு முன்பு அவருக்கு அந்த கட்டியும் நீக்கப்பட்ட்டு விட்டது அவரின் வயதோ 30 ஆகிறது உடல் பருமணானவர் மேலும் அவருக்கு மாதவிலக்கும் சீராக நடப்பதில்லை (மாதவிலக்கு ஐந்து மாதங்கள் கூட ஆகிறதாம்) இனி இவர்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ முறைகளை மேற்கொள்ள சொல்லாலாம் எந்த மாதிரியான உணவு பழக்கங்கள் நல்லது இந்த விஷயத்தை பொருத்தவரை இருவருக்குமான (ஆணிற்கும் , பெண்ணிற்கும்) பிரச்சினைகள் மற்றும் உடலுறவு மேற்கொள்ள வேண்டிய முறைகள், நாட்கள், படுக்கையில் பின்பற்றவேண்டியவை , ஆணின் அனுவின் எண்ணிக்கை போன்ற விஷயங்களை தெளிவுபடுத்தினால் இவர்களை போன்ற நிறைய நபர்களுக்கு இது உதவியாக இருக்கும்



வாழ்க வளமுடன்//


பதில் 

நல்லது நண்பரே! நீங்கள் குறிப்பிட்ட பெண் உடற் பருமனானவர் ,ஒழுங்காக மாதவிடாய் ஏற்பட்டதவர் மற்றும் திருமணமாகி எட்டு மாதமாகியும் குழந்தை இல்லாதவர் என்பதை வைத்துப் பார்த்தால் அவருக்கு சூலகத்தில் நீர்க்கட்டிகள் சேர்ந்திருக்கும் polycystic ovarian syndrom  என்ற நோய் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.அந்த நோய் பற்றி இந்த இடுகையில் வாசிக்கவும்.

அந்தப் பெண் சரியான உடற்பயிற்சி மூலமும் உணவுப் பழக்க வழக்கம் மூலமும் உடல் நிறையைக் குறைப்பது அவசியம்.அதன் மூலம் குழந்தை பெறுவதற்கான சந்தர்ப்பம் சற்று அதிகரிக்கும்.

மேலும் அந்தப் பெண்ணின் சீனியின் அளவு (ரத்தத்தில்) அளக்கப் பட வேண்டும். ஏனென்றால் அவருக்கு நீரழிவு நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

அடுத்தபடியாக அவருக்கு அந்த நோய் உள்ளது என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள பெண்ணியல் நோய் நிபுணர் ஒருவரை உடனடியாகச் சந்தியுங்கள்.
உறுதி செய்த பின் அவருக்கு சூழ் ( முட்டை) உருவாக்கத்தை அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்கப்படுவதன் மூலம் குழந்தை பெறுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.

அடுத்த கட்டமாக லப்பிராஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை மூலம் அந்த நீர்க்கட்டிகளை உடைத்து விடலாம்.

மேலும் அந்தப் பெண்ணுக்கு மெற்போமின் எனப்படும் மாத்திரையும் கொடுக்கப் படலாம்.

இவை அனைத்துக்கு நீங்கள் நம்பகமான ஒரு பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணரைச் சந்திப்பது அவசியம். 

கர்ப்பிணி மல்லாக்கப் படுக்கலாமா?

Hello sir,
i am 7 months pregnant now... 30 weeks completed.. my mom advised me to sleep only in sideways.. dont sleep straight..i am afraid to sleep now so can you let me know the sleeping position from 31st week.. Please advice..if i sleep straight .. will my baby get affected?

waiting for your next blog regarding this?


Thanks
Divya//


நல்லது திவ்யா !

உங்கள் அம்மா சொல்வது உண்மைதான்.நீங்கள் மல்லாக்கப் படுக்கும் போது கர்ப்பப் பை ரத்தக் குழாய்களை அழுத்துவதால் குழந்தைக்கு செல்லுகின்ற ரத்தத்தின் அளவு மற்றும் போசனைப் பொருட்களின் அளவு குறையலாம்.ஆகவே இடதுபுற பக்கவாட்டாக படுப்பது நல்லது.
இடுதுபக்க பக்கவாட்டாக படுக்கும் போது உங்களையறியாமலேயே மல்லாக்கத் திரும்பிவிட்டால் பெரிதாக கவலைப்படத் தேவை இல்லை , மீண்டும் பக்கச் சரிவாக படுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

Friday, August 20, 2010

குழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம்?


இது பொதுவாக நிறையப் பேருக்கு இருக்கும் சந்தேகம். இது சம்பந்தமான சந்தேகங்களைக் கொண்ட ஏராளமான மெயில்களைப் பார்த்தபின்பு தனித்தனியாக பதில் அளிக்காமல் பொதுவான இடுகையாகவே இடுகின்றேன்.

குழந்தைப் பேருக்குப் பின் உடலுறவை ஆரம்பிப்பதற்கு என்று கால எல்லை இல்லை. எப்போது பெண்ணின் மனதும் உடலும் அதற்குத் தயாராகிறதோ அப்போது அவர்கள் உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும். 

சில பெண்கள் குழந்தை பிறந்து சில நாட்களிலே அதற்குரிய மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப்  பெற்றுக் கொள்வார்கள். சில பெண்கள் உடல் உறவுக்குத் தயாராவதற்கு சில மாதங்கள் கூடச் செல்லலாம்.
ஆகவே இது பற்றி கணவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இருவரும் ஒருவருக்கொருவர் ஆலோசித்து இருவரும் மனமற்றும் உடல் ரீதியாக உடலுறவுக்குத் தயாரான பிறகு உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும். 

முக்கியமாக உடலை உறவை ஆரம்பிக்கும் போது வைத்திய ஆலோசனை மூலம் தகுந்த குடும்பக் கட்டுப்பாட்டை தெரிவு செய்து கொள்வது அவசியமாகும்.

உடலுறவில் ஈடுபடுவதால் தாய்ப்பால் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

கர்ப்பிணி தாய்ப்பால் கொடுக்கலாமா?

கேள்வி 

வணக்கம் டாக்டர் 

எனது மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். ஆனாலும் எனது முதல் குழந்தைக்கு வயது .. அவன் இப்போது பால் குடித்துக் கொண்டிருக்கிறான். கர்ப்பமாக இருக்கும் என் மனைவி தொடர்ந்து பால் கொடுக்கலாமா?

பதில்

நிச்சயமாக கொடுக்கலாம் அதனால் குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.



உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் 

Wednesday, August 18, 2010

குழந்தை குப்புற படுப்பது இயல்பா?

கேள்வி 




அன்பின் நண்பருக்கு நலம், நலமறிய ஆவல் 

என்னைப்பற்றி அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன் அதனால் நேரடியாக விஷயத்துக்குள் வந்துவிடுகிறேன் எனது மகன் பிறந்து  தற்போது சரியாக 207 நாட்கள் ஆகிறது எனது மகன் நன்றாக இருக்கிறான் அவன் உறங்கும் நேரங்களில் எப்போதும் குப்புற படுப்பதேயே விரும்புகிறான் நாம் அவனை திருப்பு மலர்ந்து படுக்க வைத்தாலும் அவன் மீண்டும் குப்புறவே படுக்கிறான் நாம் சிறிது நேரம் குப்புறபடுத்தாலே நமக்கு வலிக்கிறது அதுபோல அவனுக்கும் வலிக்குமே என்கிற கவலை மேலும் சாதரணமாக குழந்தைகள் குப்புறபடுப்பதை கண்டதில்லை இதனால் பயமும் கவலையும் ஒன்று சேர்கிறது நண்பரே அவசியம் பதில் அளிக்கவும் மேலும் குழந்தைகளுக்கான உணவுமுறை வளர்ப்பு முறை பற்றியும் எழுதுங்களேன்.

தயவு செய்து சிரமம் பார்க்காமல் பதில் அளிக்கவும். தங்களின் பதில் எதிர்பாத்து



வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர் 



பதில்
 
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சரியான படுக்கை முறை மல்லாக்கப் படுத்தாலே, அதாவது வயிற்றுப் பகுதி மேல் நோக்கியவாறு படுத்தாலே. உங்கள் குழந்தை குப்புறப் படுப்பதாக சொல்கிறீர்கள். 
அதற்கு மருத்துவ ரீதியாக எதுவும் செய்ய முடியாது. 
குழந்தை குப்புறப் படுக்கும் நேரங்களில் , குழந்தை தூங்கிய பின்பு அவனை மல்லாக்கப் படுக்க விடுங்கள்.
இவ்வாறு அவன் குப்புறப் படுக்கும் ஒவ்வொரு முறையும் செய்வதால் அவன் நாளடைவில் பழகிவிடுவான்.

இது தவிர மருத்துவ ரீதியாக அதற்காக எதுவும் செய்ய முடியாது.

குழந்தை வளர்ப்புப் பற்றி தொடர்ந்து வரும் இடுகைகளில் எழுதுகிறேன்.

Sunday, August 15, 2010

மார்பகங்கள் பற்றிய இரண்டு பொதுவான சந்தேகங்கள்!


கேள்வி 

வணக்கம் துமிழ் சார்,
எனது வயது 22 எனது மார்பகங்கள் மற்றைய பெண்களோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் எனது ஒரு மார்பகம் மர்ரயதொடு ஒப்பிடும் போது சியதாகவும் உள்ளது . இதனால் எனக்கு பிற்காலத்தில் குழந்தை பெறுவதில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா?

இப்படிக்கு,
.............................


பதில்

நல்லது தோழி இந்த சந்தேகங்கள் உங்களுக்கு மட்டுமல்ல பல பெண்களுக்கும் ஏற்படும் சந்தேகம்தான். 
முதலாவதாக மார்பகங்களின் அளவு என்பது ஒருவருக்கு ஒருவர் வேறுபடுவது. ஒருவரின் உயரம் இன்னொருவரில் இருந்து வேறுபடுவதைப்போல் மார்பகங்களின் அளவும் வேறுபடுவது சாதாரண இயல்பாகும். அதேபோல் ஒரு பெண்ணின் இரண்டு மார்பகங்களும் ஒன்றின் அளவில் இருந்து இன்னொன்று வேறுபடுவதும் சாதாரணமானதே இதனாலும் எந்தப் பாதிப்பும் இல்லை.

அடுத்ததாக குழந்தை பெறுவது பற்றி கேட்டு இருந்தீர்கள் குழந்தை பெறுவதற்கும் மார்பகங்களின் அளவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நீங்கள் பிரசவம் அடையும் போது உங்கள் உடல் உங்கள் மார்பகங்களை பால் ஊட்டுவதற்காக தயார்படுத்திக் கொள்ளும்.அதனால் தாய்ப் பால் ஊட்டுவதிலும் மார்பகங்களின் அளவு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் 

Saturday, August 14, 2010

நீரழிவு நோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் முன்

நீரழிவு நோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது அந்தக் குழந்தை பிறப்பு ரீதியான குறைபாடுகளைக் கொண்டிருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளாது என்று முன்னைய ஒரு இடுகையில் கூறியிருந்தேன். அதை தவறாகப் புரிந்து கொண்டு அவர்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்ளவே கூடாது என்பது போல எண்ணிக் கொண்டு பல சந்தேகங்களைக் கிடைக்கப் பெற்றேன்.

நீரழிவு நோயுள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றாலும் அதை தடுப்பதற்கான சில வழிமுறைகள் இருக்கின்றன.அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம்.

நீரழிவு நோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்க முன் கடைப்பிடிக்க வேண்டியவை...

முதலாவதாக அவர் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னம் அவரினுடைய சீனியை மிகவும் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும்.
குழந்தைக்கு ஏற்படும் அனைத்துப் பாதிப்புக்களுமே அம்மாவின் இரத்தத்தில் அதிக சீனி இருப்பதாலே ஏற்படுகிறது.ஆகவே அதை கட்டுப்பாட்டாக வைத்திருப்பதன் மூலம் பல பிரச்சினைகளைத் தடுக்க முடியும்.

மேலும் கர்ப்ப காலத்தில் வாய் வழியான நீரழிவுக்கான மாத்திரைகளை பயன் படுத்த முடியாது. அதனால் நீரழிவுக்கான மாத்திரை பாவிக்கும் பெண்கள் அவற்றை நிறுத்தி வைத்திய ஆலோசனை மூலம் இன்சுலின் ஊசிக்கு மாறிக் கொள்ள வேண்டும். 
குழந்தை பிறந்த பின்பு மீண்டும் மாத்திரைக்கு மாறிக் கொள்ள முடியும்.

அடுத்ததாக கர்ப்பம் தரிப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்னமே அவர்கள் போலிக் அசிட் மாத்திரையை நாளைக்கு ஒன்று வீதம் பாவிக்க வேண்டும்.

Friday, August 13, 2010

மாதவிடாய் பற்றிய ஒரு சந்தேகம்

கேள்வி 

எனது மகளுக்கு மாதாமாதம் மாதவிடாய் ஏற்படாமல் .. அல்லது .. நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகின்றது. இது எதனால் ஏற்படுகின்றது. நாங்கள் வைத்தியரிடம் செல்ல வேண்டுமா என்று தயவு செய்து விளக்கவும்?

பதில் 

மாதவிடாய் என்பது சரியாக மாதத்திற்கு ஒருதடவை ஏற்படுகின்ற நிகழ்வு என்றே எல்லோரும் கற்பனை செய்து வைத்திருக்கிறோம். 
உண்மையில் மாதவிடாய் சரியாக முப்பது நாளைக்கு ஒருதடவை ஏற்படுகின்ற நிகழ்வு அல்ல.

அநேகமான பெண்களிலே இது சரியாக மாதம் ஒருமுறை( 28 நாளைக்கு ஒருதடவை )ஏற்பட்டாலும் 21 நாளில் இருந்து 35 நாளைக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்படுகின்ற மாதவிடாயும் சாதாரனமானதாகும்.

அதாவது உங்களுக்கு மாதவிடாய்  21. தொடக்கம் 35 நாட்கள் என்ற இடைவெளியில் சீராக நடைபெறுமானால அது சாதாரனமாதாகும்.

அதற்கு வேறுபட்ட அதாவது 21 நாளைக்கு குறைவானதாகவோ அல்லது 35 நாளைக்கு மேற்பட்டதாகவோ  மாதவிடாய் ஏற்படும் பட்சத்தில் வைத்தியரின் உதவியை நாடுவது அவசியமாகும் .

நீரழிவு நோயும் குழந்தைப் பேறும்

கேள்வி 


வணக்கம் ஐயா, 


எனக்கு 42 வயது எனது மனைவிக்கு 33.எங்களுக்கு ஒரு குழந்தை எந்தக் குறையும் இல்லாமல் இருக்கின்றது .நாங்கள் இன்னுமொரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப் படுகின்றோம்.ஆனால் பிரச்சினை என்னவென்றால் எனக்கு ஒரு வருடமாக நீரழிவு நோய் உள்ளது. நீரழிவு நோய் இருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று சொல்கிறார்கள். இதனால் குழந்தை பெற்றுக் கொள்ள மிகவும் அச்சமாக இருக்கிறது.தயவு செய்து விளக்கம் தந்து உதவவும்

கணேஷன் 

பதில்

நீரழிவு நோய் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறக்கும் போது குறைபாடுகள் ஏற்படும் என்பது உண்மைதான். அவர்களிலும் சீனியின் அளவைக் கட்டுப் பாடாக வைப்பதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம்.

ஆனால்ஆண்களில் நீரழிவு இருக்கும் போது அதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பம் இல்லை.

அதாவது உங்கள் மனைவிக்கு நீரழிவு இருந்தாலே உங்கள் குழந்தை பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.உங்களுக்கு நீரழிவு உள்ளதால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

பயப்படாமல் விரைவாக குழதையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.


உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com  என்ற முகவரிக்கு அனுப்பவு ம்

Wednesday, August 11, 2010

மருத்துவச் சந்தேகமும் பதிலும்- விதைப்பை

கேள்வி!

தங்களின் சேவைக்கு எனது பணிவான வணக்கங்கள். எனது கேள்வி என்னவென்றால் எல்லோருக்கும் விதைப்பையில் 2 விதைகள் இருக்கும் ஆனால் எனக்கு மூன்று விதைகள் காணப்படுகின்றன. மூன்றாவது விதை சிறிதாக காணப்படுகின்றது. எனக்கு சுய இன்பம் காணும் பழக்கமும் உள்ளது. அடுத்த வருடம் எனக்கு திருமணம் நடக்கவுள்ளதால் இதனால் ஏதும் பிரச்சனைகள் வருமா? என்னுடைய வயது. 28

நன்றி
//

பதில்!

மூன்று விதைகள்  இருப்பதை எப்படிக் கண்டு கொண்டீர்கள் என்று தெரியவில்லை. அவை மூன்றும் விதைகள் என்பதை எப்படி உறுதிப் படுத்திக் கொண்டீர்கள். 
நான் நினைப்பது என்னவென்றால் அது வேறு ஏதாவது கட்டியாகவும் இருக்கலாம். கட்டி என்றவுடன் புற்று நோய் என்று நினைக்க வேண்டாம். சில நீர்க் கட்டிகள் கூட விதைப்பையினும் ஏற்படலாம். ஆகவே முதலில் ஒரு பொது சத்திர சிகிச்சை நிபுணரைச் சந்தித்து அது என்ன கட்டி என்று சோதித்துக் கொள்ளவும்.


உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com  என்ற முகவரிக்கு அனுப்பவு

Sunday, August 8, 2010

உடலுறவின் போது ரத்தம் வந்தால்தான் கன்னியா?பொது இடங்களில் இந்த இடுகையை வாசிப்பதை தவிர்ப்பது நல்லது

ஒரு பெண் முதன் முதலில் உடலுறவில் ஈடுபடும்போது இரத்தப் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விடயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் பயன்படுத்துகிறது.


நம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.

முதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

பெண் உறுப்பை எடுத்துக் கொண்டோமானால் தனித்தனியாக இரு துவாரங்கள் இருக்கும். ஒன்று சிறு நீர் துவாரம்( urethral opening). மற்றது மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும் மற்றும் உடலுறவில் ஈடுபடும் துவாரம்vaginal opening).
இரண்டாவதாக உள்ள மாதவிடாய் வெளியேறும் அல்லது உடலுறவில் ஈடுபடும் துவாரம் ஹைமன்  (hymen)எனப்படும் ஒரு மென்சவ்வினால் சூழப் பட்டிருக்கும். அந்த மென்சவ்வின் நடுவிலே ஒரு சிறிய துளை இருக்கும் அந்த துளையின் ஊடாகவே அந்த பெண்ணுக்கு மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும்.




முதன் முதலில் உடலுறவில் ஈடு படும் போது இந்த மென்சவ்வு கிழிவடைவதனால் ரத்தப் போக்கு ஏற்படும். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் சாத்தியமில்லை.

சில பெண்களுக்கு இந்த ஹைமன்  இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம்
சில பெண்களுக்கு இந்த ஹைமன்  உடலுறவு அல்லாத வேறு காரணங்களால் உடைந்து போகலாம்.அதாவது சைக்கிள் ஓட்டம், பாரத நாட்டியம் , ஸ்கிப்பிங் ,போன்ற செயற்பாடுகளின் போது கூட இந்த கைமண் பாதிக்கப் படலாம்.

சுய இன்ப செயற்பாட்டில் ஈடு படும் பெண்களிலும் இந்த ஹைமன்  உடைந்து விடலாம்.

சில பெண்களிலே இந்த ஹைமன் இளாஸ்டிக் (elastic) தன்மையானதாக இருக்கும் இவர்கள் எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் அவர்களின் கைமண் அப்படியே பாதிக்கப் படாமல் இருக்கலாம்.

ஆகவே ஹைமன்  மென்சவ்வு உள்ளதை வைத்தோ அல்லது ரத்தப் போக்கினை வைத்தோ மட்டும் வைத்து ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபித்து விட முடியாது. 

பி.கு- பல நண்பர்கள் கேட்ட சந்தேகங்களுக்குப் பதிலாக இந்த இடுகையை மீள் பதிவிடுகிறேன். அந்தரங்கம் கருதி அவர்களின் பெயர் வெளியிடப்படவில்லை.